மத்திய அரசில் 314 பணியிடங்கள் காலி... மார்ச் 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

By காமதேனு

இந்திய உருக்கு ஆணையத்தில்(SAIL) 314 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணியிடங்களுக்கு மார்ச் 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய உருக்கு ஆணையம்

இந்திய உருக்கு ஆணையத்தில் (Steel Authority of India Limited) தற்போது வெளியான அறிவிப்பில் காலியாக உள்ள ஆபரேட்டர்-கம் டெக்னீஷியன் (பயிற்சியாளர்) பணியிடங்கள் நிரப்பட உள்ளன.இப்பணிக்கான 314 காலியிடங்களுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட உள்ளது.

இந்தப் பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் பத்தாம் வகுப்பு + டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். அத்துடன் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18.03.2024 அன்றைய நாளின் படி, 18 வயது முதல் 28 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர் ஒவ்வொருவருக்கும் ரூ.16,100 முதல் ரூ.18,300 வரை மாத ஊதியமாக வழங்கப்படும். இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.500. எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிடபிள்யூபிடி, இஎஸ்எம் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.200 ஆகும்.

இதற்கான விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் கீழே இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் மார்ச் 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று இந்திய உருக்கு ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE