சீதாராம் யெச்சூரிக்கு செயற்கை சுவாசம் | டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

By KU BUREAU

புதுடெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அக்கட்சி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. பலதரப்பட்ட மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இது இந்த நேரத்தில் ஆபத்தானது" என்று தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE