ஆம் ஆத்மியின் விவசாயிகள் பிரிவு தலைவர் தர்லோசன் சிங் சுட்டுக்கொலை: பஞ்சாபில் பரபரப்பு

By KU BUREAU

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் விவசாயிகள் (கிசான்) பிரிவின் தலைவர் டிசி என்ற தர்லோசன் சிங் நேற்று மாலை பஞ்சாபின் கன்னா பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கன்னாவில் இகோலஹா கிராமத்தைச் சேர்ந்த 56 வயதான தலைவர் தர்லோசன் சிங் , தனது பண்ணையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டார்.

தலைவரின் சடலம் சாலையோரம் கிடப்பதைக் கண்ட அவரது மகன், அப்பகுதி மக்களின் உதவியுடன் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால், மருத்துவமனையில் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தனது தந்தை முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக தர்லோசன் சிங்கின் மகன் ஹர்பிரீத் சிங் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு சவுரவ் ஜிண்டால் கூறுகையில், “ஒவ்வொரு கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE