சென்செக்ஸ் 1,197 புள்ளிகள் உயர்வு

By KU BUREAU

மும்பை: இந்திய பங்குச் சந்தைகள் நேற்று புதிய உச்சம் தொட்டன. சென்செக்ஸ் 1,197 புள்ளிகள் உயர்ந்து 75,418 ஆகவும், நிஃப்டி 370 புள்ளிகள் உயர்ந்து 22,967 ஆகவும் ஏற்றம் கண்டன. சென்செக்ஸ் 1.61%, நிஃப்டி 1.64% உயர்ந்தன.

அதிகபட்சமாக அதானி எண்டர்பிரைசஸ் 6.24% வளர்ச்சி கண்டது. அதானி போர்ட்ஸ் 3.56%, மாருதி சுசூகி 3.16%, எல் அண்ட் டி 3.09%, ஆக்ஸிஸ் பேங்க் 3.09%, இன்டஸ்இண்ட் 2.91%, எம் அண்ட் எம் 2.79% வளர்ச்சி கண்டன. நேற்றுமுன்தினம் மத்திய அரசுக்கு ரூ.2.11 லட்சம் கோடி டிவிடெண்ட் வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கியது. 2022-23 நிதி ஆண்டில் ரூ.87,416 கோடி டிவிடெண்ட் வழங்கப்பட்ட நிலையில் தற்போது அதைவிட 140% கூடுதலாக டிவிடெண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு எதிர்பார்த்த டிவிடெண்டை விடவும் இது இரு மடங்கு அதிகம் ஆகும். நேற்றைய பங்குச் சந்தை ஏற்றத்துக்கு டிவிடெண்ட் அறிவிப்பு முக்கிய காரணம் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE