தமிழக வீரர் உட்பட 4 ராணுவத்தினர் மரணம்: சிக்கிமில் வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து

By KU BUREAU

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் உள்ள பெடோங்கில் இருந்து சிக்கிமில் உள்ள ஜூலுக் நகருக்குச் சென்று கொண்டிருந்த 4 ராணுவ வீரர்கள் இன்று சாலை விபத்தில் உயிரிழந்தனர். இதில் தமிழகத்தை சேர்ந்த ராஜபாண்டி என்பவரும் உயிரிழந்துள்ளார்.

சிக்கிம் மாநிலம் பாக்யோங் மாவட்டத்தில் உள்ள சில்க் ரோட்டில் இந்த விபத்து நடந்துள்ளது. வாகனம் சாலையில் இருந்து சறுக்கி, சில்க் ரூட் என்று பிரபலமாக அறியப்படும் ரெனாக் ரோங்லி மாநில நெடுஞ்சாலையில் தலோப்சந்த் தாராவுக்கு அருகில் உள்ள செங்குத்து வீர் என்ற இடத்தில், பள்ளத்தாக்கில் சுமார் 700 முதல் 800 அடி கீழே விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓட்டுநர் பிரதீப் படேல், மணிப்பூரைச் சேர்ந்த கிராஃப்ட்மேன் டபிள்யூ பீட்டர், ஹரியானாவைச் சேர்ந்த நாயக் குர்சேவ் சிங் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சுபேதார் கே.தங்கபாண்டி ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த 4 வீரர்களும் மேற்கு வங்கத்தில் உள்ள பினாகுரி பகுதியில் தங்கியிருந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE