அருணாசலில் லாரி கவிழ்ந்து 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

By KU BUREAU

இடாநகர்: அருணாசல பிரதேசத்தில் ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்த லாரி திடீரென பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து இடாநகர் காவல் துறையினர் கூறியுள்ளதாவது: அருணாசல பிரதேசத்தின் சுபன்சிரி மாவட்டத்தில் நேற்று ராணுவ வீரர்கள் பயணம் செய்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் நான்கு வீரர்கள் காயமடைந்தனர்.

உயிரிழந்த 3 ராணுவ வீரர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. ஹவல்தார் நகாத்சிங், நாயக் முகேஷ் குமார், கிரெனேடியர் ஆஷிஷ் ஆகியோரின் உயிர் தியாகத்துக்கு ராணுவத்தின் கிழக்கு கமாண்டன்ட் இரங்கல் தெரிவித்துள்ளது. லெப்டி னன்ட் ஜெனரல் ஆர்.சி. திவாரியும் இரங்கல் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE