மக்களே எச்சரிக்கையாக இருங்க: தமிழகத்திற்கு நாளை 'ஆரஞ்சு' அலர்ட்!

By காமதேனு

தமிழகத்தில் நாளை ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது.

வானிலை அறிக்கை

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பெரும்பாலான இடங்களில் நேற்று இரவு முதலே கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

மழை

இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் நாளை ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE