தாய் கண் முன் தம்பி கத்தியால் குத்திக்கொலை: அண்ணன் வெறிச்செயல்

By KU BUREAU

பெங்களூருவில் குடும்பத் தகராறில் தாய் கண் முன் தம்பியை அண்ணன் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் பேகூர் லட்சுமிபூரைச் சேர்ந்தவர் ரஜினி(28). இவரது தம்பி பிரதாப்(18). மெக்கானிக் வேலை செய்து வந்தார். ரஜினி உடல்நிலை சரியியில்லாததால் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனால் அண்ணன், தம்பியிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் நேற்று மாலை அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ரஜினியும், பிரதாப்பும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

அப்போது அவர்களின் சண்டையை விலக்க அவர்களது தாய் முயற்சி செய்துள்ளார். அப்போது சமையலறைக்குச் சென்ற ரஜினி, கத்தியைக் கொண்டு வந்து பிரதாப்பின் மார்பில் குத்தினார். இதனால் ரத்த வெள்ளத்தில் பிரதாப் மயங்கி விழுந்தார். இதனால் அங்கிருந்து ரஜினி தப்பியோடி விட்டார். உடனடியாக பிரதாப்பை தனியார் மருத்துவமனைக்கு அவரது தாய் உள்ளிட்ட அக்கம் பக்கத்தினர் கொண்டு சென்றனர் ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பிரதாப் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பேகூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ரஜினியை கைது செய்தனர். தாய் கண் முன் தம்பியை அண்ணன் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE