அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை: கர்நாடகாவில் மீண்டும் ரெட் அலர்ட்

By KU BUREAU

உத்தர கன்னடா: கர்நாடகா மாநிலத்தில் கடலோரப்பகுதிகள், மலைப்பகுதிகள் உள்ளிட்ட பல பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அத்துடன் கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம் முழுவதும் கடந்த மூன்று வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகள், ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கர்நாடக கடலோரப் பகுதிகளில் கனமழை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உத்தர கன்னடா, தட்சிண கன்னடா, உடுப்பி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஷிமோகாவுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், குடகு, சிக்கமகளூரு மற்றும் பெல்காம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிதர், தார்வாட், கடக், கலபுர்கி, கொப்பல், ராய்ச்சூர், விஜயப்பூர், யாதகிரி, பெங்களூரு புறநகர், பெங்களூரு மாநகர், பெல்லாரி, சாமராஜநகர், சிக்கபள்ளாப்பூர், தாவண்கெரே, ஹாசன், கோலார், மாண்டியா, மைசூரு, ராமநகரா, தும்கூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE