பாகிஸ்தான் தீவிரவாதிகளை பிடிக்க 500 கமாண்டோக்கள்

By KU BUREAU

புதுடெல்லி: ஜம்முவில் 50 முதல் 55 பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவிஇருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் தீவிரவாதபயிற்சி பெற்றவர்கள் என்றும்தகவல்கள் வந்துள்ளன.

இதையடுத்து தீவிரவாதிகளை ஒடுக்கவும் ஜம்மு பிராந்தியத்தில் பாதுகாப்பை பலப்படுத்தவும் பாராசூட் ரெஜிம்(பாரா ஸ்பெஷல் போர்ஸ்)படைப் பிரிவைச் சேர்ந்த 500 கமாண்டோக்களை பாதுகாப்புத்துறை நியமித்துள்ளது.

இந்த கமாண்டோக்கள் தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுப்பது, தீவிரவாதிகளை வேட்டையாடுவது உட்பட பல்வேறு சிறப்பு பயிற்சிகளைப் பெற்றவர்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE