லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து: சம்பவ இடத்திலேயே 9 பேர் பலி!

By KU BUREAU

பெங்களூருவில் இருந்து திருப்பதிக்குச் சென்றுக் கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று கோலார் அருகே சென்று கொண்டிருந்த போது லாரி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 -க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு இன்று காலை சொகுசு பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. இந்த பேருந்து கோலார் அருகே சென்ற போது டிப்பர் லாரி மீது பயங்கர வேகத்தில் மோதியது. இதில் பேருந்து முற்றிலும் சிதைந்து போனது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்தவர்களில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 15க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் பணியில் காவல் துறையில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து எப்படி நடைபெற்றது என்பது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE