வெங்கையா நாயுடு வாழ்க்கை ஊக்குவிப்பாக இருக்கும்: பிரதமர் நரேந்திர மோடி கருத்து

புதுடெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் வாழ்கை வரலாறு பற்றி ‘‘வெங்கையா நாயுடு - லைப் இன் சர்வீஸ்’’ என்ற தலைப்பில் ‘தி இந்து’ நாளிதழின் ஹைதராபாத் ரெசிடன்ட் எடிட்டர் நாகேஸ் குமார் புத்தகம் எழுதியுள்ளார்.

அதேபோல் ‘செலிபிரேட்டிங் பாரத் - தி மிஷன் அண்ட் மெசேஜ் ஆப் எம். வெங்கையா நாயுடு அஸ் வைஸ் பிரஸிடெண்ட் ஆப் இந்தியா’ என்ற புகைப்பட இதழை அவரது முன்னாள் உதவியாளர் ஐ.வி.சுப்பா ராவ் தொகுத்துள்ளார். மேலும் ‘‘மகாநேட்டா - லைஃப் அண்ட் ஜேர்னி ஆப் எம். வெங்கையா நாயுடு’’ என்ற புகைப்பட வாழ்க்கை வரலாறு புத்தகத்தை தெலுங்கு மொழியில் சஞ்சய்கிஷோர் தொகுத்துள்ளார்.

வெங்கையா நாயுடுவின் 75-வது பிறந்த நாள் இன்று கொண்டாப்படுகிறது. இதை முன்னிட்டு அவரது 3 வாழ்க்கை வரலாற்று புத்தகங்களை பிரதமர் மோடி நேற்று காணொலி வாயிலாக வெளியிட்டார். இதற்கான நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது:

வெங்கையா நாயுடு வாழ்க்கை பயணம் 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த 75 ஆண்டு காலத்தில் அவர் மிகச் சிறந்த சாதனைகளை படைத்திருக்கிறார். இந்த 3 புத்தகங்கள் மக்களை ஊக்குவித்து, நாட்டுக்கான சேவையில் சரியான வழியை காட்டும் என நம்புகிறேன். அவர் பாஜக தேசியதலைவராக, மத்திய அமைச்சராக, குடியரசுத் துணைத் தலைவராக இருந்த காலத்தில் நான் நீண்டகாலம் அவருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

49 mins ago

ஸ்பெஷல்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஸ்பெஷல்

3 hours ago

க்ரைம்

2 hours ago

ஸ்பெஷல்

3 hours ago

ஸ்பெஷல்

3 hours ago

க்ரைம்

2 hours ago

மேலும்