சிபிஐ வழக்கில் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு 14 நாள் காவல்

By KU BUREAU

புதுடெல்லி: மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்தது.தேர்தலுக்காக இடைக்கால ஜாமீனில் வெளிவந்த கேஜ்ரிவால் கடந்த 2-ம் தேதி திஹார் சிறையில் மீண்டும் ஆஜரானார். அவருக்கு டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதற்கு டெல்லி உயர் நீதி மன்றம் தடை விதித்தது.

இந்நிலையில் கேஜ்ரிவால் மீது,சிபிஐ.,யும் வழக்குப்பதிவு செய்தது. அவரை 3 நாள் நீதிமன்ற காவலில் விசாரித்த சிபிஐ அதிகாரிகள், நேற்று அவரை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரது காவலை நீட்டிக்க சிபிஐ வேண்டுகோள் விடுத்தது. இதையடுத்து கேஜ்ரிவாலை 14 நாள் நீதிமன்ற காவலில் அனுப்ப சிறப்பு நீதிபதி சுனேனா சர்மா உத்தரவிட்டார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE