ஹிஜாப் விவகாரம்: தனது சகோதரர் தாக்கப்பட்டதாக மாணவி புகார்!

By காமதேனு

ஹிஜாப் விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பவர்களில் ஒருவரான மாணவி ஹஸ்ரா ஷிஃபா, தனது சகோதரரை வலதுசாரி ஆதரவாளர்கள் தாக்கியதாகப் புகார் தெரிவித்திருக்கிறார்.

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஹஸ்ராவின் சகோதரர் சைஃப், நேற்று (பிப்.21) இரவு, துறைமுக நகரான மல்பேயில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் தாக்குதலுக்குள்ளானதாக ஹஸ்ரா கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக, நேற்று நள்ளிரவு ட்வீட் செய்த அவர், “ எனது ஹிஜாப் எனது உரிமை என நான் தொடர்ந்து உறுதியாக நிற்கிறேன். இதனாலேயே எனது சகோதரர் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டிருக்கிறார். எங்கள் சொத்தும் சூறையாடப்பட்டிருக்கிறது. ஏன்? நான் எனது உரிமையைக் கோரக் கூடாதா? அவர்களின் அடுத்த குறி யார்? சங்கப் பரிவார குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அதில் குறிப்பிட்டிருக்கிறார். உடுப்பி காவல் துறையினரையும் அதில் அவர் டேக் செய்திருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE