உ.பி-யில் கிணற்றில் விழுந்து 13 பேர் உயிரிழப்பு: திருமண நிகழ்வின்போது நிகழ்ந்த துயரம்!

By காமதேனு

உத்தர பிரதேசத்தில் நேற்று நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில், எதிர்பாராத விதமாகக் கிணற்றில் விழுந்து, குழந்தைகள், பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

உத்தர பிரதேசத்தின் குஷிநகர் மாவட்டத்தில் உள்ள நெபுவா நவரங்கியா கிராமத்தில் நேற்று இரவு திருமண நிகழ்வுக்காக, வந்திருந்தவர்கள் அங்கிருந்த ஒரு பலகை மீது அமர்ந்திருந்தனர். பழைய கிணறு ஒன்றை மூடும் வகையில் போடப்பட்டிருந்த அந்தப் பலகை, எடை தாங்காமல் உடைந்து விழுந்தது. இதனால் அதில் அமர்ந்திருந்தவர்கள் கிணற்றுக்குள் விழுந்தனர்.

அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், அதில் 13 பேர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இரண்டு பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இது தொடர்பாக, விசாரணை நடைபெற்றுவருகிறது.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE