இந்தியாவில் திடீரென அதிகரித்த கரோனா பாதிப்பு!

By காமதேனு

கடந்த சில நாடகளாக இந்தியாவில் கரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தினசரி கரோனா பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 665 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 85 ஆயிரத்து 914 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து 2 லட்சத்து 99 ஆயிரத்து 73 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 73 லட்சத்து 70 ஆயிரத்து 971 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 22 லட்சத்து 23 ஆயிரத்து 18 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனாலும், கரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 665 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக இம்மாதம் 21-ம் தேதி 3 லட்சத்து 47 ஆயிரத்து 254 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் 59 லட்சத்து 50 ஆயிரத்து 731 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 163.58 கோடி தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE