நம்புங்க, பனிப்பொழிவிலும் ரயில்கள் இயக்கம்!‍

By காமதேனு

கடும் பனிப்பொழிவுக்கு மத்தியிலும் ரயில்களை இயக்கும் காட்சியை வெளியிட்டுள்ளது இந்திய ரயில்வே துறை.

இந்தியா முழுதும் தற்போது கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர், டெல்லி, இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பனிப்பொழிவு அதிக அளவு காணப்படுகிறது. பொதுமக்களும், அன்றாடம் பணிக்குச் செல்லும் ஊழியர்களும் இந்தப் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா- பனிகால் பிரிவில் தண்டவாளத்தில் பனி உறைந்து காணப்படுகிறது. பனிக்கட்டிகளை அகற்றிவிட்டு ரயில்களை குறைவான வேகத்தில் இயக்கி வருகிறது ரயில்வே துறை.

இதேபோல், இமாச்சலப் பிரதேசம் மாநிலம் கல்கா- சிம்லா இடையிலான மலை ரயிலும் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. மேலும், தாராதேவி என்ற இடத்தில் உள்ள குகைப்பாதையில் இருந்து ரயில் வெளியே வரும் காட்சியை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE