ஹரியாணா சுரங்கத்தில் நிலச்சரிவு: இருவர் உயிரிழப்பு

By காமதேனு

ஹரியாணாவின் பிவானி மாவட்டத்தில் உள்ள தோஷாம் நகர்ப் பகுதியில் தாதம் எனும் பெயரில் சுரங்கம் இயங்கிவருகிறது. இந்நிலையில், இன்று (ஜன.1) ஏற்பட்ட நிலச்சரிவில், பணியில் இருந்த 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மண்ணில் புதையுண்டன.

இந்தச் சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்றும்; கிட்டத்தட்ட 15 அல்லது 20 பேரைக் காணவில்லை என்றும் முதற்கட்டச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

2 உடல்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. உயிரிழந்தவர்கள் யார் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

தோஷாம் பகுதியில் பெரிய பெரிய பாறைகளை உடைக்கும் பணி நடந்துவந்தபோது, இந்த நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. செய்தியாளர்கள் அருகில் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

2022-ம் ஆண்டின் முதல் நாளிலேயே பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருப்பது ஹரியாணா மக்களைத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE