வங்கிகள் தனியார்மய மசோதா: கைவிடக்கோரி நிதியமைச்சரிடம் விசிக வலியுறுத்தல்!

By காமதேனு

வங்கிகள் தனியார்மய மசோதாவைக் கைவிட வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, விசிக தலைவர் தொல். திருமாவளவனும் துரை.ரவிக்குமார் எம்பியும் நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.

நிர்மலா சீதாராமனை சந்தித்த போது...

பொதுத் துறை வங்கிகளை தனியார்மயம் செய்வதற்கான சட்ட மசோதாவை, இந்தக் குளிர்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யவேண்டாம் என மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனிடம் விசிக எம்பிக்களான தொல். திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் ஆகியோர் இன்று மனு அளித்தனர். இதுவரை எந்த வங்கி என்பது முடிவாகவில்லை. இந்தக் கூட்டத்தொடரில் அந்த மசோதா பட்டியல் இடப்பட்டிருந்தாலும் இன்னும் அதற்கு கேபினட் ஒப்புதல் கிடைக்கவில்லை என அவர்களிடம் நிதியமைச்சர் தெரிவித்தார்.

மழை வெள்ளத்தில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வரலாறு காணாத அளவில் பாதிக்கப்பட்டிருப்பதையும் இந்தச் சந்திப்பின் போது இருவரும் நிதி அமைச்சரிடம் எடுத்துக் கூறினார்கள். தமிழ்நாடு அரசு கேட்டுள்ள பேரிடர் நிவாரண நிதியை விடுவித்து உதவுமாறும் அவர்கள் அமைச்சரிடம் வலியுறுத்தினர். பேரிடர் நிவாரணச் சட்டத்தில் உள்ளபடி நிச்சயம் உதவிகள் செய்வதாக அமைச்சரும் உறுதியளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE