அண்ணா பல்கலை. உறுப்பு கல்லூரிகள் பட்டமளிப்பு விழா: 700 மாணவர்கள் பட்டம் பெற்றனர்

By KU BUREAU

சென்னை: சென்னை​யில் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி​களின் பட்டமளிப்பு விழா​வில் 700 மாணவர்கள் பட்டம் பெற்​றனர். அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி​களான ஆரணி, காஞ்​சிபுரம், பண்ருட்டி, திண்​டிவனம், விழுப்புரம் கல்லூரி​களின்பட்டமளிப்பு விழா பல்கலைக்​கழகத்​தில் உள்ள விவே​கானந்தர் அரங்​கில் நேற்று நடைபெற்​றது. இதில் என்எல்சி நிறு​வனத்​தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்​குநர் பிரசன்னகுமார் மோட்டுப்​பல்லி சிறப்பு விருந்​தினராகக் கலந்​து​கொண்டு சிறப்​பிடம் பெற்ற மாணவ, மாணவி​களுக்கு பதக்​கங்கள் அணிவித்து பட்டங்களை வழங்​கினார்.

2024-ம் ஆண்டு இளநிலை பொறி​யியல் பட்டம் பெற்ற 700 பேருக்கு பட்டங்கள் வழங்​கப்​பட்டன. தொடர்ந்து அனைவரும் பட்டமளிப்பு விழா உறுதி​மொழி எடுத்​துக்​கொண்​டனர். இந்த பட்டமளிப்பு விழா​வில், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ஜெ.பிர​காஷ், தேர்வு கட்டுப்​பாட்டு அலுவலர் பெ.சக்​திவேல், வழிகாட்டு குழு உறுப்​பினர் எஸ்.உஷா, உறுப்​புக் கல்லூரி​களின் இயக்​குநர் பெ.அரி​கரன், டீன்கள் ஆர்.செந்​தில், கோ.செந்​தில்​கு​மார், வே.க​விதா, பா.தமிழழகன், சி.முத்​துக்​குமரன் மற்றும் ​மாணவ, ​மாணவி​கள், பெற்​றோர் கலந்​துகொண்​டனர்​.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE