டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுக்கு அக்.9-ல் இலவச பயிற்சி தொடக்கம்

By KU BUREAU

திருவள்ளூர்: தமிழகம் முழுவதும் 2,327 காலி பணியிடங்களுக்காக டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு கடந்த மாதம் 14-ம்தேதி நடைபெற்றது.

இந்நிலையில், முதன்மை தேர்வை எளிதாக எழுத ஏதுவாக இலவச பயிற்சி வகுப்புகள் வரும் அக்.9-ம் தேதி காலை 10.30 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்குகிறது.

தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் தொடங்கப்பட உள்ள இந்த பயிற்சி வகுப்புகள், சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளதோடு, மாதிரி தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன. மேலும் விவரங்களுக்கு 9789714244; 8270865957 என்ற செல்போன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

இந்த இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், தேர்வுக்கு விண்ணப்பித்த நகல் மற்றும் 2 பாஸ்போர்ட்அளவு புகைப்படங்களுடன் திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் வந்துபயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம் என ஆட்சியர் அலுவலகம் கூறியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE