அக்.7-ல் பள்ளிகள் திறப்பு: உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்

By KU BUREAU

சென்னை: காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் அக். 7-ல் திறக்கப்பட உள்ளன. இதையடுத்து பள்ளிகளில் முன்னேற்பாடுகள் மேற்கொள்ள வேண்டுமென கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை சார்பில் அனைத்து மாவட்டமுதன்மை கல்வி அலுவலர்களுக் கும் விடுத்துள்ள அறிவுறுத்தலில் கூறியிருப்பதாவது: பள்ளிகளில் வகுப்பறைகள் உட்பட வளாகம் முழுவதும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மாணவர்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட காலாண்டு தேர்வு விடைத் தாள்கள் விநியோகிக்கப்பட வேண்டும். மேலும், 2-ம் பருவத்துக்கான பாடநூல்களும் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

அதேபோல், பருவமழையை முன்னிட்டு பள்ளிகளில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தலைமை ஆசிரியர்களுக்கு மின்னஞ்சலில் ஏற்கெ னவே அனுப்பப்பட்டுள்ளது. தற்போது பல மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் மாணவர்களின் நலன் கருதி அந்தநடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

இதுதவிர 2-ம் பருவத்துக்கான கற்றல்-கற்பித்தல் செயல் திட்டங்கள், கலைத் திருவிழா போட்டிபணிகளையும் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்பட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE