அதிர்ச்சி... 6ம் வகுப்பு மாணவனுடன் திருமண வாழ்க்கை வாழ்ந்த 34 வயது ஆசிரியை!

By காமதேனு

6ம் வகுப்பு மாணவனுடன் பாலியல் ரீதியான உறவை ஏற்படுத்திக் கொண்டு 34 வயது ஆசிரியை ஒருவர் அவருடன் 14 ஆண்டுகள் தம்பதியாக வாழ்ந்த சம்பவம் இணையவாசிகள் மத்தியில் பெரும் பேசுபொருளாகி இருக்கிறது.

தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள சமோவா தீவில் வசிக்கும் விஜி ஃபுலாவ் என்பவர் அவரது பன்னிரண்டு வயதில் அங்குள்ள அரசுப்பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அந்தப் பள்ளியில் மேரி கே. லெட்டோர்னோ என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் மேரிக்கு விஜி மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அதனால் அந்த மாணவனுடன் உடல் ரீதியிலான உறவை ஏற்படுத்திக் கொண்டார் மேரி. அப்போது மேரிக்கு 34 வயது. மேலும், அவர் ஏற்கனவே நான்கு குழந்தைகளுக்கு தாயாக இருந்தார். இந்த விபரம் வெளிச்சத்திற்கு வந்ததும், மேரியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகும், விஜியுடனான உறவை மேரி தொடர்ந்துள்ளார். இந்த உறவின் மூலம் இரண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார் மேரி.

விஜிக்கும் மேரிக்கும் 2005ல் திருமணம் நடந்தது. இருவரும் பதினான்கு ஆண்டுகளாக தம்பதியாக வாழ்ந்தனர். பின்னர் விவாகரத்து செய்துக்கொண்டனர். இல்லற வாழ்க்கையில் இருந்து விலகிய பிறகும், இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2020 ம் ஆண்டும் புற்றுநோயால் மேரி உயிரிழந்தார்.

அவர்களது உறவு குறித்து விஜி கூறுகையில், மேரிக்கு முதலில் முத்தம் கொடுத்தது தான் தான் என்றும், இருவரும் ஒருவரையொருவர் காதலித்தாலும் தனது வாழ்க்கையின் கடைசி கட்டத்தில், மேரி தனது வாழ்க்கையில் எடுத்த சில முடிவுகளுக்காக வருந்தியதாக விஜி கூறினார். மேரி இறந்துவிட்டாலும் அவரை உலகின் மிக மோசமான ஆசிரியை என்று இணையவாசிகள் வறுத்தெடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE