அதிர்ச்சி... தேர்வு எழுத வந்த கர்ப்பிணி மயங்கி விழுந்து உயிரிழப்பு!

By காமதேனு

தெலங்கானாவில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வந்த கர்ப்பிணி தேர்வு அறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்டுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் நகர், சங்கரரெட்டி மாவட்டம் இஸ்னாபூரில் உள்ள கச்சிபௌலியைச் சேர்ந்தவர் அருண்(30). இவரது மனைவி ராதிகா(26). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ராதிகா தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். அத்துடன் ஆசிரியர் பணிக்கு தயாராகிக் கொண்டிருந்தார்.

உயிரிழந்த ராதிகா

இந்த நிலையில் இஸ்னாபூரில் உள்ள சமூக குருகுலப் பள்ளியில் ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று நடந்தது. இந்த தேர்வை எழுத ராதிகா வந்தார். தேர்வு அறைக்கு வந்த போது ராதிகா திடீரென மயங்கி விழுந்தார்.

இதுகுறித்த தகவல் அறிந்து பள்ளிக்கு வெளியே இருந்த அவரது கணவர் அருண், உடனடியாக படன்செரு அரசு மருத்துவமனைக்கு ராதிகாவை கொண்டு சென்றார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உயர் ரத்தம் அழுத்தம் காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் ராதிகாவின் உடலைப் பார்த்து அவரது 2 குழந்தைகளும், உறவினர்களும் கதறி அழுதது அங்கிருந்த அனைவரையும் கண்ணீர் கலங்க வைத்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE