டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

By சி.பிரதாப்

சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் 14-வது பட்டமளிப்பு விழா செப்டம்பர் 29-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் பதிவாளர் கவுரி ரமேஷ் இன்று (செப்.21) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் 14-வது பட்டமளிப்பு விழா செப்டம்பர் 29-ம் தேதி, பெருங்குடியில் உள்ள அதன் வளாகத்தில் நடைபெற உள்ளது. இதையடுத்து கடந்த மே மாதம் நடத்தப்பட்ட இறுதி பருவத் தேர்வில் தேர்ச்சி பெற்று சட்டப் படிப்பை முடித்தவர்களும், இதுவரை பட்டமளிப்புக்கு பதிவு செய்யாதவர்களும் விண்ணப்பிக்க தற்போது அழைப்பு விடுக்கப்படுகிறது.

அதன்படி, தகுதியானவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் (http://www.tndalu.ac.in/) செப்டம்பர் 27-ம் தேதிக்குள் சென்று பட்டமளிப்பு விழாவுக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE