தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் செப்.20-ல் வெளியீடு!

By சி.பிரதாப்

சென்னை: தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் செப்டம்பர் 20-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து தேர்வுத்துறை இயக்குநரகம் சார்பில் இன்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு விவரம்: "தமிழகத்தில் தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஆகஸ்ட் 19 முதல் 23ம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வின் முடிவுகள் தேர்வுத் துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) செப்டம்பர் 20ம் தேதி மதியம் வெளியிடப்பட உள்ளது.

இதில், தேர்வர்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம். இது குறித்த கூடுதல் தகவல்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்” என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE