தமிழகத்தை பின்பற்றும் தெலங்கானா... காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்த முதல்வரின் செயலர்!

By காமதேனு

தமிழ்நாட்டைப் போல முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தெலங்கானா முதல்வரின் செயலாளர் ஸ்மிதா சபர்வால் உள்ளிட்ட ஐவர் குழு சென்னையில் ஆய்வு செய்தது.

பள்ளிக் குழந்தைகளுடன் முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் கடந்த ஆண்டு செப்.15-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த காலை உணவு திட்டம் கடந்த 25-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.

தமிழகத்தில் 31,008 பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை உணவு திட்டத்தால் சுமார் 18 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர் .இந்த நிலையில் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள கால உணவுத் திட்டத்த தெலங்கானாவில் அமல்படுத்துவது தொடர்பாக அந்த மாநில முதல்வரின் செயலாளர் ஸ்மிதா சபர்வால், பழங்குடியின நலத்துறை அரசு செயலாளர் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட அதிகாரிகள் குழு இன்று ஆய்வு செய்தது.

அப்போது உணவு தயாரிக்கும் முறை, அதனைப் பள்ளிகளுக்குக் கொண்டு செல்லும் முறை மற்றும் மாணவர்களுக்கு உணவு பரிமாறப்படும் விதத்தை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். இதன்படி சென்னை ராயபுரம் ஜிசிசி பழைய பள்ளி கட்டடத்தில் உணவு தயாரிக்கும் முறையைப் பார்வையிட்ட அதிகாரிகள், ராயபுரத்தில் உள்ள மாநகராட்சி உருது தொடக்கப் பள்ளிக்கு சென்று உணவு பரிமாறப்படுவதை ஆய்வு செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE