11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு... இனி 2 பொதுத்தேர்வு... இந்தி கட்டாயம்!

By காமதேனு

11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு நடத்தப்படவேண்டும் என்றும் அப்படி 2 பொதுத்தேர்வு நடத்தப்படும் போது எதில் அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ அதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மத்திய அமைச்சர் தா்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்

மத்திய அமைச்சர் தா்மேந்திர பிரதான்

தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-ன் படி புதிய பாடத்திட்டக் கட்டமைப்பு (NCF) தயாராகிவிட்டதாகவும், அதற்கான பாடப்புத்தகங்கள் 2024-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக கேரளா உள்ளிட்ட பல மாநில தங்களுக்கென தனிப்பாடத்திட்டத்தை உருவாக்கி வருகின்றனர். இந்த நிலையில் தேசிய கல்விக் கொள்கை குறித்து புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 பொதுத் தேர்வு நடத்தப்பட வேண்டும், அப்படி 2 பொதுத்தேர்வு நடத்தப்படும் போது எதில் அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ அதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்

மேலும் 11,12-ம் வகுப்பு மாணவர்கள் இனி 2 மொழிப் பாடங்களைக் கட்டாயம் படிக்க வேண்டுமாம். அதில் ஒன்று இந்திய மொழியாகத்தான் இருக்க வேண்டும். இவை அனைத்தும் புதிய கல்விக் கொள்கைப்படி செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரின் அறிவிப்புக்கு கல்வியாளர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். ஆண்டுக்கு ஒரு பொதுத் தேர்வையே மாணவர்கள் எதிர்கொள்ள திணறும் போது, இது எப்படி சாத்தியமாகும் என கேள்வி எழுப்புகின்றனர். மேலும் இது மத்திய அரசின் மறைமுக இந்தி திணிப்பு முயற்சி என அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE