கடலூர் பெரியார் கல்லூரி: முதலமைச்சர் கோப்பை குறித்து 4,500 மாணவர்களின் விழிப்புணர்வு நிகழ்வு

By க. ரமேஷ்

கடலூர்: தேசிய விளையாட்டு விழா மற்றும் முதலமைச்சர் கோப்பை போட்டியை முன்னிட்டு கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (ஆக.29) நடந்தது.

விழிப்புணர்வு நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் கல்லூரி இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் 4,500 மாணவ - மாணவியர் சேர்ந்து 'சி.எம். டிராபி, பெரியார் அரசு கல்லூரி' என்ற வடிவத்தில் அமர்ந்து முதலமைச்சர் கோப்பை போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்ந்து முதலமைச்சர் கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காக முதல் கட்டமாக 450 மாணவ - மாணவியர் முன்பதிவு செய்தனர். இதில், கல்லூரியின் துறைத் தலைவர்கள், விளையாட்டுத் துறை இயக்குநர்கள் மற்றும் பேராசிரியர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE