மதுரை டிவிஎஸ் பள்ளி ஆசிரியருக்கு தேசிய நல்லாசிரியர் விருது

By KU BUREAU

மதுரை: மதுரை ஜெய்ஹிந்த்புரம் (லட்சுமிபுரம்) டிவிஎஸ் மேல்நிலைப் பள்ளி தொழிற் கல்வி ஆசிரியர் ஆர்.எஸ்.முரளிதரன் (59), மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவர் ஆட்டோமொபைல் பாடத்தில் மேல்நிலை தொழிற்கல்வி ஆசிரியராக 39 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவரது கல்விச் சேவையை பாராட்டி தமிழக அரசு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதை 2021-ல் வழங்கியது.

அதற்கு முன்பு, 2000-ல் என்சிஇஆர்டி சார்பில், தமிழகத்தில் சிறந்த தொழிற்கல்வி வழங்கும் பள்ளிக்கான விருதையும், 2014-ல் தமிழக பள்ளிகளி்ல் சிறந்த தொழிற்கல்வி ஆசிரியர் விருதையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவரை பள்ளிச் செயலாளர் வெங்கட்நாராயணன், தலைமை ஆசிரியை வித்யாவதி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE