குரோம்பேட்டை ஐடிஐ-யில் மாணவர் சேர்க்கை: போக்குவரத்து கழகம் தகவல்

சென்னை: குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக ஐடிஐயில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழக முதுநிலை துணைமேலாளர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகர போக்குவரத்து கழக (எம்டிசி) நிர்வாகத்தின்கீழ் செயல்படும் குரோம்பேட்டை தொழிற்பயிற்சி நிலையத் தில் (ஐடிஐ) 42-வது பேட்ச் வகுப்பு தொடங்கப்பட உள்ளது.

இங்கு 2 ஆண்டுகளுக்கான கம்மியர்(மோட்டார் வாகனம்) பயிற்சி வழங்கப் படுகிறது. இதில் சேர 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது உச்சவரம்பு 40 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.10 ஆயிரம் கட்டணம்: பணியாளர்கள் தங்கள் பணிமனைகளில் இருந்து இதற்கான ஆவணங்களை பெற்று, விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, ஜூன் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

எம்டிசி முன்னாள், இந்நாள் பணியாளர் களின் வாரிசுகளுக்கு பயிற்சி கட்டணம் இல்லை. மற்றவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஸ்பெஷல்

56 mins ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

9 mins ago

ஸ்பெஷல்

1 hour ago

க்ரைம்

40 mins ago

ஸ்பெஷல்

1 hour ago

ஸ்பெஷல்

2 hours ago

க்ரைம்

56 mins ago

சினிமா

1 hour ago

ஸ்பெஷல்

1 hour ago

வைரல்

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்