சென்னையில் இன்று கல்விக் கடன் சிறப்பு முகாம்

By KU BUREAU

சென்னை: மாவட்ட நிர்வாகம் சார்பில் சென்னை லயோலா கல்லூரியில் இன்று கல்விக்கடன் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னை மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் பிற வங்கிகள் இணைந்து சென்னை மாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் கல்விக் கடன் வழங்குவதற்கான முகாம்கள் நடத்தி வருகின்றன.

அந்த வகையில் ஆக. 17-ம் தேதி (இன்று) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் மாபெரும் கல்விக்கடனுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

கல்விக்கடன் விண்ணப்பத்தை அதற்கு தேவையான வருமான சான்றிதழ், பான் கார்டு ஆகியவற்றை இ-சேவை மையம் மூலம் இந்த முகாமில் பதிவு செய்யலாம். எனவே, அனைத்து மாணவர்களும் பெற்றோரும் இந்த முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE