இந்திய கப்பற்படையில் வேலை... மாதம் ரூ.56,000 சம்பளம்... பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

By காமதேனு

இந்திய கடற்படையில் எஸ்எஸ்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 29-ம் தேதி கடைசி தேதியாகும்.

கேரளாவில் உள்ள இந்திய கடற்படை அகாடமியில், திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் இணைவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகவல் தொழில்நுட்பத்தில் கிரான்ட் ஆப் ஷார்ட் சர்வீஸ் கமிஷன் (எஸ்எஸ்சி) என்ற பிரிவின் கீழ் மொத்தம் 224 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எஸ்எஸ்சி அதிகாரி பணிக்கான கல்வித்தகுதி பி.காம், பி.எஸ்சி, பி.இ, பி.டெக், எம்சிஏ, எம்எஸ்சி எம்.டெக் போன்றவைகளாகும்.

இந்திய கடற்படையில் வேலை

எஸ்எஸ்சி அதிகாரி பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கும் பணியமர்த்தப்படுவார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 29-ம் தேதியாகும்.

கடற்படை

இந்திய கடற்படை எஸ்எஸ்சி குறித்த அனைத்து தகவல்களும் அதிகாரப்பூர்வ வலைதளமான www.indiannavy.nic.in ல் உள்ளது. இந்த பணிக்கு ஊதியமாக ரூ.56,100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழப்பு!

சோகம்... படகு கவிழ்ந்து விபத்து.. பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு... 167 பேர் மாயம்!

அதிர்ச்சி... குளிக்க வைத்திருந்த வெந்நீர் கொட்டி 4 வயது குழந்தை மரணம்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பயணம்... போரின் உக்கிரம் குறையுமா?

என்னைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள்...மருமகள் கொடுமையால் கலெக்டரிடம் மூதாட்டி கதறல்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE