சென்னை ஐஐடி தொடர்ந்து முதலிடம்: இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக தேர்வு!

By KU BUREAU

சென்னை: இந்த ஆண்டில் இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் ஐஐடி சென்னை முதலிடம் பிடித்துள்ளது. சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் சென்னை ஐஐடி தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் என்ஐஆர்எஃப் தரவரிசை பட்டியலை வெளியிட்டார். ஆண்டுதோறும் வெளியிடப்படும் என்ஐஆர்எஃப் தரவரிசை, இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களை பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்து தரவரிசைப்படுத்துகிறது.

இந்த தரவரிசையின்படி, ஐஐடி சென்னை நாட்டின் சிறந்த உயர்கல்வி நிறுவனமாக தரவரிசைப்படுத்தப்பட்டது, இந்திய அறிவியல் நிறுவனம் பெங்களூரு இரண்டாவது இடத்தையும், ஐஐடி பாம்பே மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் பெங்களூரு நாட்டிலேயே சிறந்த பல்கலைக்கழகமாக தரவரிசைப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜேஎன்யு டெல்லி மற்றும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகங்கள் உள்ளன. டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்துக் கல்லூரி நாட்டிலேயே சிறந்த கல்லூரியாகத் தரவரிசையில் உள்ளது. அதைத் தொடர்ந்து மிராண்டா ஹவுஸ் கல்லூரி மற்றும் செயின்ட் ஸ்டீபன் கல்லூரி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

என்ஐஆர்எஃப் இந்த ஆண்டு தரவரிசையில் மேலும் மூன்று புதிய வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. திறந்த பல்கலைக்கழகங்கள், திறன் பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பல்கலைக்கழகங்கள் ஆகிய பிரிவுகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த தரவரிசை வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்தோ மஜும்தாரும் கலந்து கொண்டார்.

என்ஐஆர்எஃப் தரவரிசை 2024 - ஒட்டுமொத்த பிரிவில் முதல் 10 நிறுவனங்கள்:

ஐஐடி மெட்ராஸ்
ஐஐஎஸ்சி பெங்களூரு
ஐஐடி பம்பாய்
ஐஐடி டெல்லி
ஐஐடி கான்பூர்
ஐஐடி காரக்பூர்
எய்ம்ஸ், புது தில்லி
ஐஐடி ரூர்க்கி
ஐஐடி கவுகாத்தி
ஜேஎன்யு, புது தில்லி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE