பள்ளி மாணவர்களுக்கு முக்கிய உத்தரவு: கல்வித்துறை அறிவிப்பு

By காமதேனு

தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 23) பள்ளி விடுமுறை என அறிவிப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நாளை பள்ளி விடுமுறை என தொடக்கப் பள்ளி இயக்குநர் அறிவித்துள்ளார். பள்ளிகளில் நிர்வாகக்குழு அமைக்கப்பட இருப்பதால் இந்த விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தொடக்கப் பள்ளி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," நடுநிலைப் பள்ளி மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வரவேண்டாம். மற்ற வகுப்பு மாணவர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு வர வேண்டும். அதே போல அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வரவேண்டும்" என்றும் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE