பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ம் தேதி ஹால் டிக்கெட் வெளியீடு

By KU BUREAU

சென்னை: பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்களை தேர்வுத் துறை ஜூன் 19-ம் தேதி வெளியிடுகிறது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிளஸ் 2 வகுப்புக்கான துணைத் தேர்வு ஜூன் 24 முதல் ஜூலை 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கான (தட்கல் உட்பட) ஹால் டிக்கெட், ஜூன் 19-ம் தேதி வெளியிடப்படுகிறது. தனித்தேர்வர்கள் தங்களுக்கான ஹால்டிக்கெட்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இதுதவிர, செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தைதனித்தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். ஹால் டிக்கெட் இல்லாதவர்கள் தேர்வெழுத அனுமதி வழங்கப்படாது.

எனவே, உரிய வழிமுறைகளை பின்பற்றி தனித் தேர்வர்கள் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். மேலும், துணைத் தேர்வுக்கான விரிவான கால அட்டவணையை மேற்கண்ட வலைதளத்தில் அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

18-ல் மறுகூட்டல் முடிவு: தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில், ‘பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதியவர்களில் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரிவிண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றமுள்ள மாணவர்களின் பதிவெண் பட்டியல் ஜூன் 18-ம் தேதி வெளியிடப்படுகிறது.

அதன்விவரங்களை மாணவர்கள் தேர்வுத்துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். பட்டியலில் இடம்பெறாதவர்களின் விடைத்தாள்களில் எவ்வித மாற்றமும் இல்லை. மதிப்பெண் மாற்றமுள்ள மாணவர்கள் மட்டுமே மேற்கண்ட தேர்வுத் துறை இணையதளத்தில் இருந்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE