பெண்ணுக்கு தொல்லை: கழுகுமலை அருகே வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த செந்தில் மள்ளர் கைது

By KU BUREAU

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே கெச்சிலாபுரம் தெற்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி வெள்ளச்சி(40). சுப்பிரமணியன் சுமார் 8 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். வெள்ளச்சி, அவரது குழந்தைகள் மற்றும் தங்கை, அவரது குழந்தை அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதே ஊரில் வசித்து வரும் செந்தில் மள்ளர் (47) என்பவர் கடந்த 26-ம் தேதி இரவு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வெள்ளச்சியை பாலியல் தொந்தரவு செய்ய முயன்றுள்ளார். மேலும், வீட்டில் இருந்தவர்களை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் கழுகுமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து செந்தில் மள்ளரை கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE