பெரம்பலூர் அதிர்ச்சி: பெட்ரோல் பங்கில் ரூ.28.46 லட்சம் மோசடி செய்த ஊழியர் கைது

By KU BUREAU

பெரம்பலூர்: நான்கு ரோடு பகுதியில் அரியலூர் மாவட்டம், ராஜாஜி நகரைச் சேர்ந்த கஜேந்திரன் (61), பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இவரது பெட்ரோல் பங்கில், முதுநிலை மேலாளராக கடந்த 3 ஆண்டுகளாக திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் கிளியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ச.சதீஷ் (37) பணியாற்றி வந்தார்.

இவர், கடந்த சில மாதங்களாக பெட்ரோல் பங்கின் வரவு- செலவு விவரங்களை உரிமையாளருக்கு சரிவர கணக்கில் காட்டாமல் ரூ.28,46,764-த்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து கஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிக்கந்தர் பாட்ஷா வழக்குப் பதிவு செய்து, சதீஷை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE