சென்னை: வளசரவாக்கம் பகுதியில் வீட்டில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 1 பெண் மீட்கப்பட்டுள்ளார்
இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னை பெருநகர காவல், விபச்சார தடுப்புப் பிரிவு-1 (Immoral Traffic Prevention Unit, ITPU-1) காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படையினர் நேற்று (11.03.2025) அன்று வளசரவாக்கம், வெங்கட சுப்பிரமணி நகர், 12 வது குறுக்கு தெருவில் உள்ள ஒரு வீட்டை கண்காணித்தபோது, அங்கு பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.
அதன்பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட தனிப்படை போலீசார் மேற்படி வீட்டில் சோதனைகள் மேற்கொண்டு, அங்கு பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்திய ஆவடி சுரேஷின் மனைவி விஜயலட்சுமி (42) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மேற்படி இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு தங்க வைத்திருந்த 1 பெண் மீட்கப்பட்டார்.
விசாரணையில் எதிரி விஜயலட்சுமி மேற்படி வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்தியது தெரியவந்தது.
» டெல்டா மாவட்ட கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: ஜி.கே.வாசன் கண்டனம்
» ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழலால் பயனடைந்தவர்கள் யார்? - சிபிஐ விசாரணைக்கு அன்புமணி கோரிக்கை
கைது செய்யப்பட்ட எதிரி விஜயலட்சுமி விசாரணைக்குப் பின்னர் இன்று (12.03.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார். மீட்கப்பட்ட பெண் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.