ஓசூர் அருகே பரிதாபம்: குட்டையில் விழுந்த மாணவர், மீட்க முயன்ற ஹெச்.எம். உயிரிழப்பு

By KU BUREAU

ஓசூர் அருகே அரசுப் பள்ளி அருகே தண்ணீர் குட்டையில் தவறி விழுந்த மாணவரும், மீட்க முயன்ற தலைமை ஆசிரியரும் உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூரை அடுத்த எலுவப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மணிகண்டன். இவரது மகன் நித்தீன் (8). இவர் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். இப்பள்ளியில் ஓசூரைச் சேர்ந்த கவுரிசங்கர் ராஜு (53) தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், நித்தீன் நேற்று மதியம் உணவு இடைவேளையின்போது, பள்ளியின் அருகே உள்ள விவசாய நிலத்தில் உள்ள தண்ணீர் சேமிப்பு குட்டை அருகே சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக நித்தீன் குட்டையில் தவறி விழுந்தார். சக மாணவர்கள் உடனடியாக தலைமை ஆசிரியர் கவுரிசங்கர் ராஜுவிடம் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து நீரில் தத்தளித்த நித்தீனை மீட்க, பதற்றத்துடன் குட்டையில் குதித்தார். இதில், இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த பாகலூர் காவல் ஆய்வாளர் பிரகாஷ் தலைமையிலான போலீஸார், 2 பேரின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.3 லட்சம் நிதியுதவி... தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில், “தனி​யாருக்​குச் சொந்​த​மான பண்​ணைக் குட்​டை​யில் மூழ்கி அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் கவுரிசங்​கர், நித்​தின் ஆகியோர் உயரிழந்த செய்​தி​யறிந்து மிக​வும் வேதனையடைந்​தேன். இரு​வரது குடும்​பத்​தினர், உறவினர்​களுக்கு ஆறு​தல் தெரி​விப்​பதுடன், முதல்​வரின் பொது நிவாரண நிதியி​லிருந்து தலா ரூ.3 லட்​சம் நிதி​யுதவி வழங்க உத்​தர​விட்​டுள்​ளேன்” என்று தெரி​வித்​துள்​ளார்​.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE