விருதுநகரில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: வளர்ப்பு தந்தை கைது

By KU BUREAU

விருதுநகர்: 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வளர்ப்பு தந்தையை மகளிர் போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி 6-ம் வகுப்பு படிக்கிறார். இவரது தந்தை இறந்த நிலையில், கூலித் தொழிலாளியான 32 வயது தாய், அழகர்சாமி (44) என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்பு 2-வது திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 5 வயதில் மகன் உள்ளார்.

இந்நிலையில், கடந்த 28-ம் தேதி பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த சிறுமிக்கு, அழகர்சாமி பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோவில் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE