7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: கோவில்பட்டி நபருக்கு 20 ஆண்டு சிறை

By KU BUREAU

தூத்துக்குடி: சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் கோவில்பட்டி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவில்பட்டி பாரதி நகரைச் சேர்ந்த சுப்பையா மகன் ஆரோக்கியசாமி (43). இவர், கடந்த 2020-ம் ஆண்டு, 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ், குற்றம்சாட்டப்பட்ட மணிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் காவல் துறை சார்பில் அரசு வழக்கறிஞர் முத்து லட்சுமி ஆஜரானார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE