சேலத்தில் கூடா நட்பை கைவிட மறுத்த மனைவி கொடூரமாக கொலை: கணவர் கைது

By KU BUREAU

சேலம்: கூடா நட்பை கைவிட மறுத்த மனைவியை கழுத்து அறுத்துகொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.

சேலம் கோட்டகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (70). இவரது மனைவி இந்திரா (60). இவர்களுக்கு ஒரு மகன், மூன்று மகள்கள். இவர்களுக்கு திருமணமாகி தனியாக வசிக்கின்றனர். பாலகிருஷ்ணன் அப்பகுதியில் உள்ள ஆயில் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், நேற்று காலை இந்திரா வீட்டில் கழுத்து அறுபட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். அருகே உள்ள இந்திராவின் சகோதரி மாரியம்மாள் வசித்து வந்த குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. தீக்காயம் அடைந்த மாரியம்மாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கருப்பூர் போலீஸார் இந்திராவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரி்த்தனர்.

போலீஸார் கூறும்போது, இந்திராவுக்கு உறவினருடன் தவறான தொடர்பு இருந்துள்ளது. இதனால் தம்பதிக்குள் தகராறு இருந்துள்ளது. தவறான நட்பை கைவிட மறுத்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காலை தூங்கிக் கொண்டிருந்த இந்திராவின் கழுத்தை அவரது கணவர் பாலகிருஷ்ணன் அறுத்து கொலை செய்து விட்டு, மனைவியின் உறவுக்கு உதவி செய்து வந்த அவரது சகோதரி மாரியம்மாள் வீட்டுக்கு தீ வைத்து விட்டு தப்பியுள்ளார். ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பெங்களூருக்கு தப்பிச்செல்ல முயன்றபோது பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது, என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE