திருச்சி அதிர்ச்சி: ஓய்வுபெற்ற வங்கி ஊழியரின் வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு

By KU BUREAU

திருச்சி: ஸ்ரீரங்கம் அடையவளஞ்சான் வீதியைச் சேர்ந்தவர் எம்.எஸ். கே.கேசவன்(65). ஓய்வுபெற்ற தனியார் வங்கி ஊழியர். இவர் கடந்த 28-ம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு கும்பகோணம் சென்றார்.

பின்னர், நேற்று முன்தினம் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் திருடுபோயிருந்தது. தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE