பூந்தமல்லி | பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற 2 பேர் கைது

By KU BUREAU

பூந்தமல்லி: சென்னை- போரூர், குன்​றத்​தூர் சாலை எம்.எஸ்​.நகர் அருகே நேற்று முன்தினம் இரவு எஸ்ஆர்​எம்சி (போரூர்) போலீ​ஸார் வாகன சோதனை​யில் ஈடுபட்டுக் கொண்​டிருந்​தனர். அப்போது, அவ்வழியே சந்தேகத்​துக்கு இடமான வகையில் மோட்​டார் சைக்​கிளில் வந்த 2 பேரை போலீஸார் மடக்கிபிடித்து விசா​ரித்​தனர். அப்போது, அவர்கள் முன்னுக்​குப் பின் முரணாக பேசி​ய​தால், அவர்​களின்கை பையை போலீ​ஸார் சோதனை செய்​தனர். அதில், ரூ.28 லட்சம் மதிப்புள்ள பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் இருந்​ததும், அதனை அவர்கள் மாற்ற முயன்​றதும் தெரிய​வந்​தது.

இதையடுத்து, இருவரை​யும் போலீ​ஸார் கைது செய்து முதல் கட்ட விசாரணை நடத்​தினர். கைதான, இருவரும் செங்​கல்​பட்டு மாவட்​டம், அனகாபுத்​தூர் பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார் (34), அங்குராஜ் (37 ) ஆவர். இருவரும் ரியல் எஸ்டேட், கவரிங் நகை விற்​பனை, பிளாஸ்​டிக் பொருட்கள் விற்​பனை, பழைய பொருட்களை வாங்கி விற்பது போன்ற தொழிலை செய்து வந்துள்ளனர்.

இவர்​களுக்கு அறிமுகமான இஸ்மா​யில் என்ற நபர், ‘என் உறவினரான சீர்​காழியைச் சேர்ந்த சதாமிடம் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் இருக்​கிறது. பண மதிப்​பிழப்​பின்​போது அவர் வெளி​நாட்​டில் இருந்​த​தால் அவரிடம் இருந்த பணத்தை மாற்ற இயலாமல் போனது. ஆகவே மாற்றி தரவேண்​டும். அப்படி மாற்றி தந்தால், கமிஷன் தொகை அளிக்​கிறேன்’ என தெரி​வித்​துள்ளார்.

இதையடுத்து கடந்த 20 நாட்​களுக்கு முன்பு சீர்​காழியைச் சேர்ந்த சதாம், சென்னை- கோயம்​பேட்​டைச் சேர்ந்த விக்கி​யிடம் அளித்த ரூ. 28 லட்சம் மதிப்​பிலான பழைய ரூபாய் நோட்டுகளை பெற்ற இருவரும், கடந்த 20 நாட்​களாக அவற்றை மாற்று​வதற்கான முயற்சி​களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

வடபழனியைச் சேர்ந்த கார்த்திக், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி தருவதாக கூறி​யுள்​ளார். இதையடுத்து இருவரும் அவற்றை எடுத்​துக் கொண்டு வடபழனிக்கு நேற்று முன் தினம் மாலை சென்​றுள்​ளனர். அவர்களை காவிரி ரெபினா என்ற பெண்​மணி​யிடம், கார்த்திக் அறிமுகப்​படுத்​தி​யுள்​ளார்.

அப்போது, அப்பெண்​மணி, ‘பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து விட்டுச் சென்​றால், ரூ.1 லட்சத்​துக்கு ரூ. 4,000 வீதம்நாளை வந்து பெற்றுக் கொள்​ளலாம்’ என்று கூறி​யுள்​ளார். அதனை ஏற்க மறுத்த இருவரும் பழைய ரூபாய் நோட்டு​களுடன் அனகாபுத்​தூர் ​திரும்பும் போது, ​ ​போரூரில் போலீ​ஸாரிடம் சிக்கி​யுள்​ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE