சென்னை: சென்னை ஓட்டேரி பட்டாளம் மங்கபதி தெருவில் வசித்து வரும் ஆனந்த குமார் (36). அப்பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவர் கடந்த மாதம் 24-ம் தேதி இரவு ரூ.75 ஆயிரம் பணத்தை கல்லா பெட்டியில் வைத்துவிட்டு, வழக்கம் போல ஹோட்டலை மூடிவிட்டு சென்றார். மறுநாள் காலை, ஹோட்டலை திறந்து கல்லாப் பெட்டியை பார்த்தபோது ரூ.75 ஆயிரம் மாயமானது தெரிந்தது.
இதுகுறித்து ஆனந்த குமார் அளித்த புகாரின் பேரில், போலீஸார் நடத்திய விசாரனையில் அதே ஹோட்டலில் சமீபத்தில் சமையல் மாஸ்டராக வேலைக்கு சேர்ந்த வியாசர்பாடியை சேர்ந்த சதிஷ்குமார்(34) பணத்தை திருடியது தெரியவந்தது. போலீஸார் அவரை கைது செய்தனர்.