சென்னையில் மெத்தபெட்டமைன், ஹெராயின் போதை பொருட்கள் பறிமுதல்

By KU BUREAU

சென்னை: சென்னை காவல் எல்லைக்குட்பட்ட புனித தோமையர்மலை போலீஸார் நேற்று கிண்டி கத்திப்பாரா பாலம் அருகில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் மெத்தபெட்டமைன், ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

அவர்கள் புரசைவாக்கத்தை சேர்ந்த ரூபி ஆன் மாசிலாமணி (47), அனகாபுத்தூரை சேர்ந்த முகமது காசிம் (40) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த 2 கிராம் மெத்தபெட்டமைன், 2 கிராம் ஹெராயினை பறிமுதல் செய்த போலீஸார், இருவரையும் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE