செல்போன் சார்ஜ் ஒயரிலிருந்து மின்சாரம் பாய்ந்து இளைஞர் மரணம்; தூக்கத்தின்போது நடந்த விபரீதம்

By KU BUREAU

தெலங்கானா: கமாரெட்டி மாவட்டத்தில் 23 வயது இளைஞர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்த போது, ​ படுக்கைக்கு அருகில் இருந்த செல்போன் சார்ஜர் ஒயரிலிருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

கமாரெட்டி மாவட்டத்தை சேர்ந்த மாலோத் அனில், நேற்று தனது மொபைல் போனை சார்ஜ் செய்வதற்காக படுக்கைக்கு அருகில் சார்ஜர் ஒயரை தொங்கவிட்ட பின்னர் அருகில் தூங்கியுள்ளார்.

அனில் தூங்கிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக செல்போன் சார்ஜர் மின்கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்தார். உடனடியாக அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால் உயர்தர வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் சிகிச்சையின் போது உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணமான அனிலுக்கு மனைவியும், ஒன்றரை வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். அனிலின் மரணம் தொடர்பாக போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

முன்னதாக, தெலங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 40 வயதுடைய நபர் தனது வளர்ப்பு நாயை குளிப்பாட்ட தண்ணீரை சூடாக்கும் போது மின்சார ஹீட்டரிலிருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE