சிவகங்கை: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு வாழ்நாள் முழுவதும் ஆயுள்

By இ.ஜெகநாதன்

சிவகங்கை: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளிக்கு வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கள்ளங்குடி புதூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பாண்டியராஜன் (55). இவர் கடந்த 2020 நவ.10ம் தேதி 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து தேவகோட்டை அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து பாண்டியராஜனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன் தொழலாளி பாண்டியராஜனுக்கு வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனையும், ரூ.100 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE