தேவகோட்டையில் கார் மெக்கானிக்கை கொலை செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை

By இ.ஜெகநாதன்

சிவகங்கை: தேவகோட்டையில் முன்விரோதத்தில் கார் மெக்கானிக்கை வெட்டி கொலை செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பழைய சருகணி ரோடு பகுதியைச் சேர்ந்த கார் மெக்கானிக் செந்தில் முருகன் ( 39). இவருக்கும், சேக்கப்பன் தெருவைச் சேர்ந்த கொத்தனார் முருகனுக்கும் (45) இடையே முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 28ம் தேதி முருகன் தனது உறவினர் ஓட்டுநர் கண்ணதாசனுடன் ( 45) சேர்ந்து செந்தில் முருகனை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இது குறித்து தேவகோட்டை நகர் போலீஸார் வழக்குப் பதிந்து முருகன், கண்ணதாசன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு சிவகங்கை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி சொர்ணம் நடராஜன் குற்றவாளிகள் முருகன், கண்ணதாசன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.5,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE